ஹி..ஹி.. சிரிங்க(2)

Written by தமிழ்பித்தன் on 6:24 AM

ஒரு தடவை சிறுவன் ஒருவனுக்கு அவனது தந்தை அடியோ அடியென அடித்து விடுகிறார். இதனால் கோபம் கொண்ட அந்த சிறுவன் அழுதுகொண்டு கோவிலைநோக்கி செல்கிறான். அங்கு சென்றும் அவன் அழுகிறான். இதை அவதானித்த கடவுள் அவன் மீது இரக்கம் கொண்டு கீழ் இறங்கி வந்து "ஏன் அழுகிறாய் குழந்தாய்" எனக் கேட்டார். அதற்க்கு அந்த சிறுவன் "எனக்கு எனது தந்தையை பிடிக்க வில்லை அவர் தினமும் என்னை போட்டு அடிக்கிறார் அவரை நீங்கள் தான் கொல்ல வேண்டும்" என்றான் அந்த சிறுவன். அதற்க்கு கடவுள் "சின்ன பிரச்சினைக்கு போய் அவரை கொல்லலாமா" என்று கேட்டார். அதற்கு சிறுவன் " எத்தனை அரக்கரை கொண்டிருப்பாய் அதுபோல என் அப்பாவையும் நீ கொல்ல வேண்டும்"என்றான். இறைவன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காத அந்த சிறுவன் பிடிவாதமாக இருந்தான் பின் இறைவன் அவனுக்கு அந்த வரத்தை அளிக்கிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த சிறுவன் வீடு செல்கிறான் அங்கே அவனது தந்தை பேப்பர் வாசித்துகொண்டிருப்பார். இதனைக் கண்டு சிறுவன் திகைத்தபடி நிற்க பக்கத்து வீட்டிலிருந்து அழுகுரல் வரும் "ஏனுங்க எங்களை எல்லாம் விட்டுட்டுப் போட்டியளா? இன்றுவரை நல்ல சுக தேகியாக தானே இருந்தியள்" என்று

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 0 கருத்துக்கள்: Responses to “ ஹி..ஹி.. சிரிங்க(2) ”