போய் வருகின்றேன்! நன்றி!!!?

Written by தமிழ்பித்தன் on 5:37 AM

சில வேளைகளில் எனது பதிவுகள் எல்லை மீறி போயிருப்பதை நானும் அறிவேன். அதற்கான சில நியாயப்படுத்த தக்க காரணங்கள் இருப்பினும் அவற்றை எல்லாம் இங்கே சுட்டிக்காட்ட நான் விரும்பவில்லை. நான் என்னை நீயாயப்படுத்தி நல்லவன் என பெயர் எடுக்கவும் விரும்பவில்லை. சில விசமிகள் திட்டமிட்டே என் பின்னூட்டல் பெட்டியை அசிங்கம் செய்ததையும் அறிவேன். அவற்றுக்கா அவ்பின்னூட்டங்களை மட்டறுக்க முடியாமல் இருந்தமைக்கு மன்னிப்பு கேட்கிறேன்.அத்துடன் அந்த சர்ச்சைக்குரிய அந்த பதிவுகள் நீக்கவும் படுகின்றன.

இது வரை இந்த பித்தனின் பிதற்றலை பாசத்தோடு வாசித்து உரிமையோடு தோளில் தட்டி உற்சாக மூட்டிய உறவுகள், சிலதை தவறு என எதிர்த்து நின்று வழி நடத்திய நண்பர்கள். நான் வலைப்பதிவில் வந்து கொடுத்ததைக்காட்டிலும் பெற்றுச் செல்வதே அதிகம் ஆகவே என்றும் நான் உங்கள் கடனாளியே......

காலங்கள் மாறும் வரும் காட்சிகளும் மாறும் மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறி மீண்டும் உங்களிடம் வருவேன். உங்களை செல்லமாக கிள்ளி விளையாட அது வரை உங்கள் விளையாட்டுக்கள் அனைத்தையும் மூன்றாம் ஆளாக நின்று பார்த்து சிரிப்பேன் சில வேளை மனம் வெம்புவேன் இத்தருணத்தில் நான் இல்லையே என்று சிலவேளை வருந்துவேன் இன்னும் மாறவில்லையா என்று...

நான் வளத்த மாவும் பலாவும் என்நாவிற்கில்லை,
நான் வளர்த பசுவின்பால் என் ரீயிற்க்குள்ளில்லை,ஆனாலும்
மாடு தாகத்தால் கதறும் போது உள்ளுக்குள் சில விரிசல்கள்.
அந்த விரிசல் ரணமாகி உதிரமாகிவராதவை,
கண்ணீராகி காற்றோடு கலப்பவை
அந்த கண்ணீர்த்துளி பசுவின் தாகத்தை போக்குமா??

நான் வளத்த வளர்ந்த உறவுகள் முகம் சுழிக்கும் போது
வளத்த நாய் மட்டும் நன்றியுடன் என் காலடியில்
என்னிதயம் அதன் காலடியில்

பிரிவுத்துயர் மிகவும் கொடியது அதை பல முறை அனுபவித்தவன் அதுவே நான் பிரிவதால் பிரிபவர் ஆனந்தமடைகிறார் எனின் அதுவே எனக்கு ஆனந்தமும் கூட..


ஆயுத முனையைக் காட்டிலும் அகிம்சையை நேசிப்பவன் என்ற முறையில் இனிமேல் எந்த தனிநபர் மீதோ அல்லது ஏதாவது திரட்டிகள் நான் ஏதாவது சந்தர்ப்பத்திலும் ஏதாவது ஒர் இடத்திலும் நான் ஒளிந்து நின்று எதிர்க்மாட்டேன். எதிர்க்க விரும்பின் நேரே வருவேன் அவ்வாறு எதிர்க்க பலம் போத வில்லையா மௌனித்து போவேன். அந்த மௌனங்கள் சம்மதங்கள் ஆகாது.

-நன்றி

ஐயோ... நம்ம பப்பியை சுட்டுட்டாங்கள்

Written by தமிழ்பித்தன் on 8:05 AM


அப்பாவும் அண்ணணும் அருகில் இருந்த தோட்டத்துக்கு மிசின் பூட்ட சென்றிருந்தனர். நான் ரீ குடித்து கொண்டிருந்தனான் சிறிது நேரத்தில் ஆறு வெடியோசைகள் தொடர்ந்து கேட்கின்றன.தொடர்ந்து ஐயோ பப்பியை சுட்டுட்டாங்கள், என்று அண்ணணுடைய குரல் கேட்கிறது. நானும் அம்மாவும் வீட்டுக்கு வெளியே ஓடியந்து பார்கிறோம். எமது செல்ல நாய்குட்டி (6 மாதம் தானிருக்கும்) பப்பி 6 குண்டுகளால் சல்லடை போடப்பட்டு சாகடிக்கப்பட்டு இறந்து கிடந்தது. எல்லோர் கண்ணிலும் நீர் கசிகிறது. இருவர் சாரத்துடன் இரு துவக்குடன் நாய்குட்டிக்கு கிட்டவந்து மச்சான் செத்துட்டுதுடா? . என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள் எவருக்கும் துணிவில்லை எதிர்த்து கேள்வி கேட்க.

அப்போது, அம்மம்மா ஏன்றா தம்பிகளா சுட்டியள் என்று கேட்கிறார் அப்போது அவர்கள் "மனிதருக்கே சாப்பிட சாப்பாடில்லை இதெல்லாம் எதற்க்கு நம்நாட்டில் என்று சொல்லி விட்டு" செல்கிறார் சிறிது நேரம் கழிந்து மீண்டும் சில வெடியோசைகள்........

ஆமாம் நான் பால் குடிக்கும் என்னருகில் ஓர் சிரங்கை பாலுக்காக ஒரு மணிநேரம் காவல் காக்குமே படுக்கும் வரைக்கும் என்னுடன் கொஞ்சி விளையாடுமே அது எங்கே..

"ஒர் உயிர் போகும் போது ஒராயிரம் கண்ணீர் பூக்கள் சிந்தப்பட்டால் ஒன்றில் அந்த உயிர் விலைமதிக்கதக்கது ((அரசியல் சினிமா வகை பிரபல்யங்களாக இருக்கலாம்)) அல்லது அந்த நாடு விலைமதிக்க தக்கது அதுவே சொர்க்கத்தின் சாட்சியம். அங்கே சித்தாந்தம், தத்துவ புரட்சி, மறுமலர்ச்சி எதுவுமே தேவையற்றது "

-- ஜோட்ச் பெனடிட்