போய் வருகின்றேன்! நன்றி!!!?

Written by தமிழ்பித்தன் on 5:37 AM

சில வேளைகளில் எனது பதிவுகள் எல்லை மீறி போயிருப்பதை நானும் அறிவேன். அதற்கான சில நியாயப்படுத்த தக்க காரணங்கள் இருப்பினும் அவற்றை எல்லாம் இங்கே சுட்டிக்காட்ட நான் விரும்பவில்லை. நான் என்னை நீயாயப்படுத்தி நல்லவன் என பெயர் எடுக்கவும் விரும்பவில்லை. சில விசமிகள் திட்டமிட்டே என் பின்னூட்டல் பெட்டியை அசிங்கம் செய்ததையும் அறிவேன். அவற்றுக்கா அவ்பின்னூட்டங்களை மட்டறுக்க முடியாமல் இருந்தமைக்கு மன்னிப்பு கேட்கிறேன்.அத்துடன் அந்த சர்ச்சைக்குரிய அந்த பதிவுகள் நீக்கவும் படுகின்றன.

இது வரை இந்த பித்தனின் பிதற்றலை பாசத்தோடு வாசித்து உரிமையோடு தோளில் தட்டி உற்சாக மூட்டிய உறவுகள், சிலதை தவறு என எதிர்த்து நின்று வழி நடத்திய நண்பர்கள். நான் வலைப்பதிவில் வந்து கொடுத்ததைக்காட்டிலும் பெற்றுச் செல்வதே அதிகம் ஆகவே என்றும் நான் உங்கள் கடனாளியே......

காலங்கள் மாறும் வரும் காட்சிகளும் மாறும் மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறி மீண்டும் உங்களிடம் வருவேன். உங்களை செல்லமாக கிள்ளி விளையாட அது வரை உங்கள் விளையாட்டுக்கள் அனைத்தையும் மூன்றாம் ஆளாக நின்று பார்த்து சிரிப்பேன் சில வேளை மனம் வெம்புவேன் இத்தருணத்தில் நான் இல்லையே என்று சிலவேளை வருந்துவேன் இன்னும் மாறவில்லையா என்று...

நான் வளத்த மாவும் பலாவும் என்நாவிற்கில்லை,
நான் வளர்த பசுவின்பால் என் ரீயிற்க்குள்ளில்லை,ஆனாலும்
மாடு தாகத்தால் கதறும் போது உள்ளுக்குள் சில விரிசல்கள்.
அந்த விரிசல் ரணமாகி உதிரமாகிவராதவை,
கண்ணீராகி காற்றோடு கலப்பவை
அந்த கண்ணீர்த்துளி பசுவின் தாகத்தை போக்குமா??

நான் வளத்த வளர்ந்த உறவுகள் முகம் சுழிக்கும் போது
வளத்த நாய் மட்டும் நன்றியுடன் என் காலடியில்
என்னிதயம் அதன் காலடியில்

பிரிவுத்துயர் மிகவும் கொடியது அதை பல முறை அனுபவித்தவன் அதுவே நான் பிரிவதால் பிரிபவர் ஆனந்தமடைகிறார் எனின் அதுவே எனக்கு ஆனந்தமும் கூட..


ஆயுத முனையைக் காட்டிலும் அகிம்சையை நேசிப்பவன் என்ற முறையில் இனிமேல் எந்த தனிநபர் மீதோ அல்லது ஏதாவது திரட்டிகள் நான் ஏதாவது சந்தர்ப்பத்திலும் ஏதாவது ஒர் இடத்திலும் நான் ஒளிந்து நின்று எதிர்க்மாட்டேன். எதிர்க்க விரும்பின் நேரே வருவேன் அவ்வாறு எதிர்க்க பலம் போத வில்லையா மௌனித்து போவேன். அந்த மௌனங்கள் சம்மதங்கள் ஆகாது.

-நன்றி

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 2 கருத்துக்கள்: Responses to “ போய் வருகின்றேன்! நன்றி!!!? ”

  2. By Vijay on June 18, 2008 5:58 AM

    ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

    "கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
    போராளியின் வெற்றிப்பேரிகை"

    http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

    அன்புடன்,
    விஜய்
    கோவை

  3. By Tamil Paiyan on July 6, 2008 2:14 AM

    உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்