மகாபாரதத்தில் விஞ்ஞான ஆருடகள்

Written by தமிழ்பித்தன் on 6:38 AM


ந்து சமயம் முன்னைய காலத்தில் நல்ல வளர்ச்சி அடைந்து இருந்திருக்கலாம். பின் ஏற்பட்ட ஓர் மிகப்பெரிய போர் அல்லது இயற்க்கை சீற்றத்தால் அந்த குழு சிதைக்கப்பட்டிருக்கலாம். சரி அதற்க்கு நாங்கள் அதன் இதிகாசங்களை சீர்தூக்கிப்பார்த்தல் வேண்டும். அவை உண்மையாக இருந்தால் இந்து சார்ந்தவை உணமை எனவும், அவை பொய்யாயின், அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் நல்லவளர்ச்சிப் பாதையில் பயணித்தார்கள், விஞ்ஞான சிந்தனை உடையவர்களாக இருந்தார்கள், என்றும் கருத முடியும். ஓர் வளர்ச்சி அடைந்த குழுவால் அன்றி இப்படி மற்றவர்களால் இப்படி சிந்திக்க முடியாது. சரி இனி இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.
மற்ற இதிகாச புராணங்களை காட்டிலும் மகாபாரதமானது பல கருத்துக்களை சொல்கிறது. அதில்..,
கதையின் ஆரம்ப கட்டத்தில் திருதராட்டிரின் மனைவி காந்தாரி கர்ப்பமுற்றிருந்தால். அச்சமயத்தில் பாண்டுவின் மனைவி குந்தி தனக்கு கிடைத்த வரத்தை வைத்து தருமதேவனின் உதவியுடன் முதல் குழந்தை தருமனை பெற்றெடுக்கிறார். இதை அறிந்த காந்தாரி கோபத்தில் தன் வயிற்றை கல்லால் குத்துகிறார். அதனால் கரு சிதைவடைந்த நிலையில் வெளிவருகிறது இதையறிந்த பெரியவர்கள் அதிர்ச்சியும் கலக்கமும் அடைகின்றனர் அப்போது அங்கே வந்த முனிவர் அதற்க்கு தீர்வு இருப்பதாக கூறுகிறார் இதை அறிந்தவர்கள் அவரிடம் அப்பிரச்சினையை தீர்க்குமாறு வேண்டுகின்றனர் அதற்க்கு இசைந்த முனிவர் 100 அதிசய குடங்களை உருவாக்கி அதனுள் சிதைந்த கருவை நூறாக பிரித்து இடுகிறார். பின் அந்த குடத்துக்குள் குழந்தைகள் வளர்ச்சி அடைந்து பிறக்கின்றன் இது அதில் வருகின்ற ஓரு காட்சி.
அதாவது தற்காலத்தின் பரிசோதனைக்குழாய் குழந்தை குளோனிங்முறைமை குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளை கண்ணாடிப் பெட்டியினுள் வைத்தல் போன்ற செயல்களுக்கு ஒப்பிடலாம் இக்காலத்தில்பயன்டுததுவதற்க்கு மாற்றாக வேறு முறைகள் அக்காலத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

தொடரும்...

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 0 கருத்துக்கள்: Responses to “ மகாபாரதத்தில் விஞ்ஞான ஆருடகள் ”