கொழும்பை விட்டு தமிழர்கள் வெளியேற்றப்படுகின்றனர்

Written by தமிழ்பித்தன் on 5:30 AM

1983 ம் ஆண்டு இனக்கலவரத்தை காரணம்காட்டி பல தமிழர்கள் அக்காலத்தில் வடக்கு கிழக்குக்கு விரட்டி அடிக்கப்பட்டனர் (((அப்போது வேளியேறியதில் எங்கள் குடும்பமும் அடங்கும்)) அக்காலத்தில் ஆட்சியில் இருந்த ஐ.தே.க அதை சிறப்பாக செய்து முடித்தது. அதன் தாக்கம் விடுதலைப் போடாட்டத்தின் ஓர் தீடீர் திருப்பமாக மாறியதை எவராலும் மறக்க முடியாது. அலைஅலையாக இளைஞர்கள் போராட்ட இயக்கங்களிலே தம்மை இணைத்துக்கொண்டனர்.
பின் 1996 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை கைப்பற்ற நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு அஞ்சிய மக்கள் வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கி புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள். அது விடுதலைப்புலிகளின் ஆளனி வளர்சிக்கு ஒர் தூண்டு கோலாக விளங்கியது. அதன் காரணமாக முல்லைத்தீவு ஆனையிறவு போன்ற அசைக்கவே முடியாது. என கற்பனை செய்யப்பட்ட தளங்கள் கைப்பற்றப்ட்டன .
உலக நடப்பை ஒப்பு நோக்குவோமாக இருந்தால் ஜேர்மன் சர்வதிகாரியான கிட்லரால் பல யூதமக்கள் அடித்து வெளியேற்றப்பட்டனர் .((அப்போது வெளியேற்றப்படடவர்களில் ஒருவர்தான் அணு ஆயுதத்தின் தந்தை எனக் கொள்ளப்படுபவர் அவர்பின் மெரிக்காவுக்காக அதை உருவாக்கினார்)) இதன் தாக்கம் கிட்லரின் சர்வதிகாரத்தின் முடிவில் யூதமக்களுக்கு இஸ்ரேல் என்கின்ற தனிநாட்டுக்கு வழிகோலியது பின் வந்த இஸ்ரேலியரால் காசா பிரதேசத்திலிருந்து முஸ்லீம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் அதன் வெளிப்பாடு பாலஸ்தீனத்துக்கு வழிவகுத்தது .
தற்போது தமிழ்மக்கள் இதை எவ்வாறு எடுத்து நோக்கப்போகிறார்களோ? சர்வதேசம் அல்லது இந்தியா இதை எவ்வாறு நோக்க போகிறது என்பதில் தான் அதன் மூலம் கிடைக்கப் போகின்ற பலன்கள் அல்லது மறுதளிப்புகள் அடங்கியிருக்கும்


கொசுறு;- நாடாளமன்ற கூட்டத்தொடரில் இதை தொடக்கியப் பேசிய மகேஸ்வரனை தொடர்ந்து பேசிய ஜேவிபி உறுப்பினர் ஜே.வி.பி.யின் அனுரா குமார திசநாயக்க இச்செயலுக்காக சிங்கள மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றார் ஆமாம் ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம் அதுபோல கிடக்கு

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 0 கருத்துக்கள்: Responses to “ கொழும்பை விட்டு தமிழர்கள் வெளியேற்றப்படுகின்றனர் ”