மாயாவின் மயூரனுக்கு கண்டணம்! மொக்கை வாழ்க கும்மியும் வாழ்க!

Written by தமிழ்பித்தன் on 7:04 AM

இன்று மாயா வலைப்பூ மயூரன் அவர்கள் ரெம்ப அழுது புலம்பி தள்ளிட்டாரு. நம்ம மொக்கைகளையும் கும்மியையும் இழிவாக தரம் குறைச்சு பேசிட்டாரு. இதனால், நம்ம மொக்கைகள் கும்மிகள் ரெம்ப மனம் நெந்து இருப்பதாக அறிக முடிகிறது.

மயூரன் அண்ணா நீங்கள் பெரிய எழுத்தாளர் தரத்தில் எழுதுபவர்கள் எங்களுக்கு அப்படி எல்லாம் எழுத தெரியாது. நாங்கள் புகையிலை இடுக்குகளில் சிறிதாக தெரிகிற கிளை ஒடித்து விட்டு களைப்பில் ஆலமர நிழலில் வெட்டிப்பேச்சு பேசித்தானையா பழக்கம் எங்களுக்கு, உங்களை மாதிரி தத்துவம் அறிவியல் சிந்தனை எல்லாம் ஒத்து வராத விசயம் நாங்களும் வலைபதிகிறோம். என்கின்ற ஒரு பெருமைக்காக ஏதோ தட்டவிழைகிறோம். அது உங்களை எரிச்சலூட்டி அழவைக்கும் என்று சத்தியமாக நாம் நினைத்ததில்லை.

ஆரம்பத்தில் எழுத வேணும் என்று ஆசைப்பட்ட போது பத்திரிகைகளுக்கு அனுப்பினோம் அவை நிறைவேற வில்லை. ஆனாலும், பாடசாலையில் ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். மாதம் ஒரு இதழ் வெளியிடுவது என, முதல் தடவையாக அன்று அச்சில் வந்த எனது எழுத்துக்களை கண்ட மகிழ்சிதான், இன்றும் தொடர்கிறது, இந்த வலைப்பூவில்.ஒருடத்தையும் விடுகிறார்கள் இல்லை என்றுதானே இங்கே வந்தோம் இங்கேயிருந்தும் விரட்டினால் எங்கே பொவோம்.

கேளரவம் படத்தோனியில் சொல்வதானால் "மயூரா போக வேணும் என்றுதான் தோனுது எனக்கு தமிழ் மணத்தை விட்டால் யாரை ஐயா தெரியும் நான் யாருட்ட போக"

இனி விசயத்துக்கு வருவோம். ஆரம்பத்தில் நானும் யாழ்பாணத்திலிருந்து பதிந்து கொண்டிருந்த கால கட்டத்தில் நன்றாக தத்துவம் கவிதை என வெட்டியாக சிந்தித்து எழுதுவதுண்டு. ஒரு ஆங்கில கவிஞனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ஒருவன் தத்துவம் கதைக்கிறான் எனின் அவனுக்கு தனிமையில் சிந்திக்க நேரம் இருக்கிறது. அது போலவே நானும் ஒரு பொறுப்பற்றவன் என்று கூறியிருப்பார்.
கிடைக்கிற நேரத்தில் உங்கள் மாதிரியானவர்களின் நல்ல வலைப்பூக்களையும் களைப்பும் மனச்சுமை நீங்க சில மொக்கைகளையும் வாசித்து விட்டு என்ன எழுத தோன்றுகிறதோ அதையே கிறிக்கி விட்டு செல்லகின்ற ஜாதி ஐயா நாங்கள்.

உங்களுக்கு திடீர் ஞானோதயத்துக்கு காரணம் என்ன????

///இவ்வாறனவர்களின் பதிவுகளால் தான் " ஆச்சி மசாலா உமா " (அதாங்க பெப்சி உமா ) வரை Bloging ஐ குறை சொல்லும் நிலைக்கு கொண்டுபோய்விட்டது///


ஆச்சி மாமியை திட்டியமையா??? (நீங்கள் அவர் தீவிர ரசிகர் என தெரியாது எங்களுக்கு)

பின்னூட்டம் அதிகம் தேவையானால்
உங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இட வேலைக்கு யாரையாவது அமர்த்தலாமே??

நல்ல ஒரு பதிவுக்கு பின்னூட்டம் எதற்க்கு அதை வாசித்தவர் பயன் அடைகிறார்கள். எத்தனைபேர் வாசித்தார்கள் என்பதற்ககு கணிப்பான் இருக்கிறது.

எங்களை மாதிரி மொக்கைக்கும் கும்மிக்கும் ஆயிரம் மாற்றுக்கருத்து இருக்கும் அவர்கள் எங்களை திட்டி சபித்து விட்டு செல்ல பின்னூட்ட வசதி பயன்படுகிறது.

////கொஞ்சம் நல்லா எழுதுறவங்களும் வலையுலகை விட்டு விலகிப்போவது நிஜமான வலையுலகவாசிகளுக்கு மாபெரும் இழப்பு..///

அப்படியா??
சாதாரண வலைப்பதிவில் எதிர்த்து நிலைக்க தென்பற்றவர்கள். நாளை வாழ்க்கையில் வீசப்போகிற சூறாவளிக்கு எவ்வாறும் முகம் கொடுக்க போகிறார்கள்.

///ஒரு வலைப்பதிவர் எல்லாவற்றையும் ஒரே பதிவில் எழுதாமல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பதிவுகள் தொடஙகலாம் அதேமாதிரி திரட்டிகளையும் தொடங்கலாம் . . . //

இதற்கு எனது ஆலோசனை நீங்கள் தமிழ்மணத்தின் வகைப்படுத்தியவையை பயன்படுத்தலாம் அவ்வகைப்படுத்தலில் புதிதாக ஏதாவதை சேர்க்க விரும்பினால் தமிழ்மண நிர்வாகிகளுக்கு அறிவியுங்கள். அவர்கள் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்கள். அல்லது நீங்கள் வாசிக்க விரும்பும் வலைப்பூவை கூகிள் ரீடரில் சேமித்து வைக்கலாம். அல்லது ஒரு திரட்டியை நீங்களே வடிவமைக்கலாம் அதற்க்கு ரவிசங்கர் உதவுவார்.

///இனி என்றாவதொருநாள் வலைப்பக்கங்களுக்குள் நுழையும் போது தேநீர் கடையில் நடக்கும் ஒரு அரசியல் சண்டை போன்று ஒரே கூச்சலும் குழப்பமுமாக இல்லாது . ஒரு தென்றல் வீசும் நந்தவனத்திற்குள் நுழைந்த உணர்வு மட்டுமே ஏற்படும் சூழ்நிலை உருவாகும் , இந்த இணையப் பதிவு எனும் " நல்லதோர் வீனையை ". . .நலமுடன் பேணுவார்கள் என்ற நம்பிக்கையேடு///

ஏனையா வீணை கீணை என்று பழசோடையெல்லாம் வலைப்பூவை ஒப்பிடுகிறீர். இது நவின யுகத்து ரம்செட் போன்றது.
விவேக் சொல்லது போல தூக்கிப் போட்டு குத்துங்கோய்ய்ய்ய...யா...........

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 0 கருத்துக்கள்: Responses to “ மாயாவின் மயூரனுக்கு கண்டணம்! மொக்கை வாழ்க கும்மியும் வாழ்க! ”